Wednesday, January 8, 2020

யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்...

யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்... 

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.


மேலும் அறிக :

திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களை யாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள்.....

Friday, November 3, 2017

google india,google map,yuva.mail@facebook.com,keerai kaadu

Tuesday, January 3, 2017

சரகலை பயிற்சி

சரகலை பயிற்சி - Sarakalai- சரவித்தை
-------------------------------------
சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில்
முதன்மையான கலையே சரகலை
ஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான்
ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு
உபதேசித்த உன்னத கலையாகும்.
சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய
சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு பின்
அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக
சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப்
பட்டவைகள் ஆகும்.
சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல
என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர்
எம்பெருமான் ஈசனே ஆகும்.
சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம்
தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள்
சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம்
என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு
விட்டால் அது அப்படியே பலித்து
விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள்
அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின்
உடல், மனம் ,வாக்கு மூன்றிலும்
ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை
முறைப்படி குருகுல முறையாக தீட்சை
பெற்று இதன் இரகசியங் களை பயிற்சி செய்து
சித்தி பெற்ற வருக்கு மட்டுமே இது
சாத்தியம். சித்தர் நூல்களை படித்து
தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது
என்பது சாத்தியமாகாது.ஏனென்றால் சரகலை
எனும் தெய்வீகக் கலையினை அனுபவ
முறையாக சித்தி செய்யும் சூட்சும
இரகசியங்கள் எந்த ஒரு சித்தர் நூல்களிலும்
பகிரங்கமாக வெளியிடப்பட
வில்லை. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை
கட்டுப்படுத்தும் வல்லமையும், பஞ்சபூத
சக்திகள் இக்கலைக்கு இணங்கி வேலை
செய்வதாலும் சித்தர் பெருமக்கள் இதன்
உண்மை இரகசியங்களை நூல்களில் பதிவு
செய்ய வில்லை. மேலும் தனக்கு இணக்கமான
சீடருக்கு மட்டும் குணம் ,தகுதி அறிந்து
உபதேசமாக தீட்சை அளித்து வந்துள்ளனர்.
நாம் மேலோர் எனப் போற்றப்படும்
மகான்கள்,யோகிகள், சித்தர்கள்,
முனிவர்கள்,ரிஷிகள்,அனைவரும் தெய்வீகக்
கலையான சரகலையில் தேர்ச்சி
பெற்றவர்களே.தான் இறைநிலையில் சித்தி
பெற்று,தன்னை நாடி வரும்
அன்பர்கள் குறையினை நீக்கி நல்வழி
காட்டவும் சரகலையினை பிரயோகம்
செய்துள்ளனர்.
சரகலையின் பிரயோக முறையால் மனம்
சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில்
முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து
காரிய வெற்றி,தேர்வில் வெற்றி,வெளியூர்
பயணங்களில் வெற்றி,நவகிரகங்களின்
தீமையை அகற்றவும்,கோர்ட் வழக்குகள்
வெற்றி,அனைத்து கலைகளில்
தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம்,
போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன்
நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி
பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை
தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து
கொள்ளவும்,தன்னை நாடி வரும் அன்பருக்கு
உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை
சாஸ்திரம் ஆகும்.
மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால்
இல்லறத்தில் பூரணத்துவ
நிம்மதி,சந்தோசம்,மகிழ்ச்சி பெறுவதுடன் சரம்
பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க
ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும்
அடையலாம்.
சகோதர சகோதரிகளுக்கு பணிவான
வேண்டுகோள், பதிவு நீளம் பெரிதாக
இருக்களாம், இருப்பினும் ஒருமுறைக்கு
பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம்
என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து
வைக்கும் ஒவ்வொருவரும் இந்த
சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது
இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள்
வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வள்ளமை
கொண்டது.
நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான
சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள்
தங்கள் மன நினைவினாலே ஐயங்களை
தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா??
என்று உமாதேவி கேட்க!! அதற்கு
சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை
அல்லது சரவித்தை.
கலைகளிலேயே முதன்மையானதும்
சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது
அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது
முதல் இரவு உறங்கப்போகும் வரை
உங்களுக்கும், உங்களை சுற்றி
உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது
என்பதை இந்த சரகலையை கொண்டு 100%
சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர்
நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது
உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி??
போகும் காரியம் வெற்றி பெருமா?? என
அனைத்தையும் துள்ளியமாக
கணித்துவிடலாம்.
சரம் என்றால் சுவாசம் என்று பொருள்.
பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக
இயங்குகின்றது. அதாவது சுவாசம் இடது
பக்கமாக ஓடினால் இடகலை அல்லது
சந்திரகலை என்றும், வலது பக்கமாக ஓடினால்
பின்கலை அல்லது சூரியகலை என்றும்,
இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று
கூறுவர். இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால்
எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில்
மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற
வேலைகள் செய்தால் நடக்காது. சுவாசம்
வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும்
கடினமான வேலைகளை செய்வது சிறந்தது.
சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால்
செய்யும் வேலையே சிறந்தது. மேலும்
சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை
பூரணம் என்றும், சுவாசம் ஓடாத பக்கம்
சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம்
சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து
கொண்டால், வலது பக்கத்தை பூரணம்
என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை
சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும்
என்ற விதியுள்ளது. அது யாதெனில் திங்கள்,
புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய
நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்த
ு தொடங்க வேண்டும். அதே போல் செவ்வாய்,
வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்த
ு தொடங்க வேண்டும். ஒருவேலை அந்த
நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம்
ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம்
போன்றவை ஏற்படும். உதாரணதிற்கு திங்கள்
அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல்
வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும்.
ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது
என்பதை எப்படி கண்டுணர்வது என்றால்,
காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம்
(சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில்
ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள்.
அப்படி
ஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான
நாள். உதாரணதிற்கு திங்கள் அன்று
கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை
கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி
கொண்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு
சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும்
மாறிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால்
அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய
வலதுகலையில் தொடங்கினால் நோய்
ஏற்படுவது 100% உறுதி. எழுந்த உடனே
சுவாசத்தை கவனித்து சரத்தை மாற்ற
கற்றுக்கொண்டால் நோயிலிருந்து தப்பித்துக்
கொள்ளலாம்.
அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம்
என்ற ஒன்றை வைத்திருப்பார்கள்.
அது இந்த
சுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர
வேறு ஒன்றுமில்லை. சுவாசத்தை எப்படி
மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள்
உண்டு. அவை
1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த
காலை முதலில் தரையில் அழுத்தி
ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம்
மாறிக்கொள்ளும்.
2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம்
ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி
படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க
வேண்டும். உதாரணதிற்கு வலது பக்கம் சரம்
ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்,
உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து,
இடது கையை மடித்து தலைக்கு கீழே
வைத்து, கால்களை நீட்டி வலது கையை
வலது தொடை மீது வைத்துக்கொண்டு
உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே
சுவாசம் வலது கலைக்கு மாறிகொள்ளும்.
3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது
தொடை மீது வலது காலைப் போட்டு
உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும்.
இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும்
முறை. ஷிரடி பாபா படத்தை பார்த்தால்
புரியும்.
4.அல்லது உட்காரும்போது இடது கையை
தரையில் அழுத்தி சற்று இடது பக்கம்
சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில்
மாறியோடும்.
5.அல்லது இடது அக்குலில் ஒரு கணமான
துண்டை மடித்து வைத்து கொண்டால்,
சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும்.
இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20
நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு
பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து
கொண்டால் கூட போதுமானது. பிரம்ம
முகுர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு,
அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30
A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம்.
சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான
தியான முறையாகும். எனவே இதில்
தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான
சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும்.
இப்படி கவனிப்பதால் சரம் இடம்,வலம்,சுழும
ுனை என மாறுவதை கவனிக்க முடிவும்.
மேலும் சுழுமுனை சுவாசம் ஓடும்போது
கவனித்தலே தியானமுறைகளில் சிறந்தது,
இதற்கென்று வேறு எதுவும் தேவையில்லை.
இப்படி கவனிக்கும் போது உங்களை சுற்றி
என்ன நடக்கின்றது?? எது உண்மை?? என
அனைத்தையும் துள்ளியமாக கண்டறிய
முடிவும்.
அது எப்படி?? ஒருவர் உங்களிடம் பேசுகின்றார்
என்றால், அவர் எந்த பக்கத்தில் வந்து
நிற்கின்றார் என கவனிக்கவும். அதாவது
உங்களின் வலது பக்கமாவா? அல்லது இடது
பக்கமாவா? என்று கவனிக்கவும். அவர்
உயரமான இடத்தில் நின்று பேசினாலோ
அல்லது உங்களிடம் நேருக்கு நேர் நின்று
பேசினாலோ அல்லது இடது பக்கத்தில் நின்று
பேசினாலோ உங்களின் இடது பக்கத்தில்
நிற்கின்றார் என கொள்ளவேண்டும். இதுவே
உங்கள் வலது பக்கத்தில் நன்றாலோ அல்லது
உங்களை விட தாழ்வான இடத்தில் நின்றாலோ
அல்லது உங்களுக்கு பின்னாடி நின்றாலோ
உங்களின் வலது என கொள்ளவேண்டும்.
இப்படி வலது, இடது என்பதை வைத்தே
அனைத்தையும் கணித்து விடலாம். முன்பே
கண்டது போல பூரணம் என்பது சரம் ஓடும்
பக்கம், அதுபோல் ஓடாத பக்கம் சூனியம்.
ஒருவர் சரம் ஓடும் பக்கம் நின்று எதாவது
பேசினால் அல்லது கேட்டால் அது உண்மை
மற்றும் நடக்கும் என்று பொருள், ஓடாத பக்கம்
நின்றால் அது பொய் மற்றும் நடக்காது என்று
பொருள். இது போன்று சகலத்தையும்
துள்ளியமாக கணிக்கலாம்.
திசைகளில் சூரியனுக்குரிய திசை கிழக்கு
மற்றும் வடக்கு ஆகும். அதுபோல்
சந்திரனுக்குரிய திசை மேற்கு மற்றும் தெற்கு
ஆகும். ஒருவருக்கு சரம் வலதில் ஓடும்
காலத்தில் சூரியனுக்குரிய திசையில் பயணம்
செய்தால் காரியம் நன்மையில் முடியும்.
அதுபோல் இடதில் ஓடினால் சந்திரனுக்குரிய
திசையில் செல்வது நல்லது. சந்திரன்
ஓடும்போது சூரியதிசையிலோ அல்லது
சூரியன் ஓடும்போது சந்திரதிசையிலோ
சென்றால் காரியம் சித்திக்காது.
சூரியசரம் நடக்கும்போது அதற்குரிய
திசையில் செல்லாமல் மாறாக
செல்லவேண்டும் என்றால் வலது காலை
முன்வைத்து ஒற்றையடியாக மூன்றடி தூரம்
நடந்துவிட்டுப் பயணத்தை தொடங்க
வேண்டும்.இதேபோல் சந்திரசரத்திற்க
ு இடதுகாலை முன்வைத்து செல்ல
வேண்டும். இரண்டுசரமும் ஒன்றாக நடந்தால்
இரண்டு கால்களையும் ஒன்றாகக்
கூட்டிவைத்து மூச்சடக்கி தத்தித்தத்தி
மூன்றுமுறை சென்றுபின் பயணம் செய்ய
வேண்டும்.
அதேபோல் ஒரு நல்ல ஒழுக்கநெறியுள்ள
உயர்ந்த மனிதரை சந்திக்கும் போது உங்களில்
பூரண பக்கத்தில் அவர் உள்ளபடி
நின்றுகொண்டால் மிக்க நன்மை தரும்.
அதேபோல் வழக்கு, தீயவர் போன்றோரை
சந்திக்க நேர்ந்தால் உங்களின் சூனிய
பக்கத்தில் அவர் உள்ளபடி செய்து கொண்டால்
அவர் பலம் குன்றிவிடும்.
கோவிலுக்கு செல்லும்போதும் உங்கள்
பூரணபக்கம் சுவாமியும், சுவாமியின்
பூரணபக்கம் நிங்களும் இருந்தால் மிக்க பலன்
உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரம் சுவாமிக்கு
முழுவதுமாக ஓடுவதாக கணக்கில் கொள்ள
வேண்டும்.
எச்சரிக்கை- உலகையே ஆண்டுவந்த
ராஜவம்சத்தினர் இன்று இருந்த தடம்
தெரியாமல் அழிந்து மண்ணான காரணம், இது
போன்ற தெய்வ கலையை தவறாக தன்
சுயநலத்திற்காக பயன்படுத்தினதால்தான்
என்பது மறுக்க முடியாத உண்மை.
"சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே"
என்பது முன்னோர் வாக்கு. ஏன்னென்றால் "
சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்".
எனவே நல்லவழியில் இதை பயன்படுத்தினால்
தெய்வத்திற்கு நிகராக கொண்டு செல்லும்
என்பது உறுதி.
குறிப்பு- அடிப்படை சரவித்தையை மட்டுமே
இங்கு பதிவுசெய்ய பட்டுள்ளது. அனைத்தும்
தெரிய வேண்டும் என்றும் படத்தில் உள்ள
புத்தகத்தை கையில் வைத்து கொள்ளுங்கள்.
மேலும் சரவித்தையை குருமுகமாகதான்
மட்டுமே கற்க வேண்டும் என்று
சொல்வார்கள். அதை நம்ப வேண்டாம்.
இலவசமாக கிடைத்தால் கற்று கொள்ளுங்கள்.
பணம் கொடுத்து கிடைத்தால் இதையேதான்
சொல்ல போகிறார்கள். முன்பே கூறியது
போல் "சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன்". பணம்
பார்ப்பவன் அல்ல. குருவின் மீதும் திருவின்
மீதும் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்.
மற்றவை தானாகவே வந்து சேரும்.இயற்கையு
ம் இறைவனும் கண்டிப்பாக ஒருவனுக்கு
நன்மையை மட்டுமே செய்வார்கள்.
வருடத்தில் எல்லா நாட்களும் எல்லா
நேரங்களிலும் சரம் பார்க்க வேண்டும் என்ற
அவசியம் இருந்தாலும், சரம் தானாகவே
சரியாக நடக்க ஒரு வழி உண்டு. அதாவது சரம்
பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம்,
பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற
முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர
மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து
சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும்
வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க
முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில்
சரத்தை சரியாக நடக்கவிட்டால் போதும்,
வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக
நடக்கும்.
ஆடி மாதம் முதல் தேதி முதல் சூரியன்
தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயண காலம்
என்றும், வடக்கு நோக்கி நகரும் காலம் தை
மாதம் முதல் தேதி முதல் உத்தராயண காலம்
என்றும் சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு
முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே
உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள்
உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி
பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை
இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக
இருந்தாலும் கவனிக்க தேவையில்லை. சரம்
இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல்
ஓட வேண்டும். தட்சிணாயணம் ஆடி மாதம்
முதல் தேதியானால் சரம் வலது பக்கத்தில்
ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட
வேண்டும். அவ்வாறு சரம் ஓடினால்
வருடத்தில் எல்லா நாட்களும் நலமாக
அமையும்.
இந்த சரவித்தையை படிப்பதோடு மட்டும்
விட்டுவிடாமல் உங்கள் வாழ்க்கையில் இதை
ஒரு அங்கமாக கொண்டால் அனைத்தும்
நன்மையாகவே நடக்கும் என்பது உறுதி.
அனைத்தையும் நன்கு புரியும்வரை
ஒருமுறைக்கு பலமுறை படித்து பலன் பெற
வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்.
சரம் பார்த்தலை அதிகாலை 4 முதல் 6 மணி
வரை பார்த்து, தவறாக நடந்தால் சரிசெய்து
கொள்ள வேண்டும். துள்ளியமாக
கூறவேண்டும் என்றால் சூரிய உதயத்திற்கு
இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்க்க
வேண்டும். இதை பிரம்மமுகுர்த்த நேரம்
என்றும் வள்ளலார் இதை அமுதகாற்று
இறங்கும் நேரம் என்றும் கூறுவார்.
வள்ளலாரின் உபதேசத்தில் (அதிகாலை
எழுந்திருந்து இறைவனை வணங்குதல்)
என்பதன் காரணம் இதுதானாகும். இப்படி
எழுபவர்களுக்கு அந்த நாள் முழுவதும்
கிடைக்க வேண்டிய பயன் அந்த இரண்டு மணி
நேரத்திலேயே கிடைத்துவிடும் என்பார்.
சொல்ல கணக்கில்லாத பல நன்மைகளை இந்த
இரண்டு மணி நேரம் தன்னுல் அடக்கியுள்ளது.
வள்ளலார் உபதேசங்களை நன்கு அறிந்தவர்
இந்நேரத்தை சிறப்பாக பயன்படுத்திகொள்வர்.
முடியாதவர்கள் இதற்காக கஷ்டபட
தேவையில்லை, 4.30 மணிக்கு விழிப்பு
வந்ததும் சரத்தை கவனித்து அதற்கு ஏற்றது
போல் திரும்பி படுத்துக் கொண்டு உங்கள்
சுவாசத்தை கவனித்தலோ, இறை பிராத்தனை
செய்தலோ, அங், மோ, ஓம் போன்ற எதோ ஒரு
மந்திரத்தை மனதால் தொடர்ந்து உட்சரிப்பதோ,
கண்களை மூடி உள்ளே தெரியும் இருளை
கவனிப்பதோ போன்ற எதாவது ஒன்றே
போதுமானது, படுக்கையிலிருந்து
எழவேண்டிய அவசியமில்லை.
புறதூய்மையை விட அகதூய்மையே
சிறந்தது. இந்நேரம் நீங்கள் செய்யும்
செயலுக்கு பலன் ஆயிரம் மடங்கு அதிகமாக
கிடைக்கும் என்பது உறுதி. முயற்சி செய்து
பாருங்கள் தியானத்திற்கு என்று தனி நேரம்
ஒதுக்க தேவை இருக்காது. உங்கள் உள்ளினும்
உங்களை சுற்றியும் நல்ல மாற்றத்தை உணர
ஆரம்பிப்பீர்கள்.
இருப்பினும் திங்கள் காலையில் எழுந்தவுடன்
சரம் பார்க்க மறந்துவிட்டிர்கள் என்று
வைத்துக்கொள்வோம். அந்த நாளில்
முதல்முதலாக நீங்கள் கவனிக்கும்
சுவாசத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்.
அது பகலாகட்டும், மதியமாகட்டும்,
மாலையாகட்டும் நீங்கள் கவனிக்கும் முதல்
சுவாசம் இடதில் ஓடும். அதன்பின் ஐந்து
நிமிடத்திலோ அல்லது அதற்குமேல் பார்த்தால்
சரம் மாறிக்கொள்ளும் அதில் தவறில்லை.
அப்படி இல்லாமல் நீங்கள் கவனிக்கும் முதல்
சரம் வலது பக்கத்தில் நடந்தால், சரத்தை
இடது பக்கத்தில் மாற்றி கொண்டாலே
போதுமானது. சிலருக்கு காலை எழுந்தவுடன்
சரம் சரியாக நடக்கும் பின் சிறிது நேரம்
கழித்து சரம் மாறி நடக்கும். அதில் எந்த ஒரு
தவறும் இல்லை. நீங்கள் கவனிக்கும்
முதல்முதல் சரத்தையே கணக்கில் கொண்டு
சரி செய்ய வேண்டும். அதற்கடுத்து நடக்கும்
சரங்கள் மாறி நடந்தால் தவறில்லை.
நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன்,
அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை
மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம்
பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி
செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம்
தோல்வியை தழுவாது, வெற்றியை
கொடுக்கும்.
நமக்கு வலப்புறம் (பிங்கலை)
மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட
வேண்டிய காரியங்கள்:-
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து
உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு. 12.
உறங்குவதற்கு. மேற்கண்ட காரியங்களை
நமது மூச்சோட்டம் சூரியகலையில்
இருக்கும்போது செய்ய, அவை சுபமாக
முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.
நமக்கு இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம்
செல்லும்போது செய்யப்பட வேண்டிய
காரியங்கள்:-
1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல். 2. பொருள்
வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு. 4. சொத்துகள்
வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு. 10. தாலுக்கு
பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம்
சந்திரகலையில் இருக்கும்போது செய்ய,
அவை சுபமாக முடியும், என்று ஞான சர
நூல் கூறுகிறது. சந்திர கலை பெண்
தன்மையுடையது.
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் நாளை
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்
கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று
கூறுகின்றார் என வைத்துக் கொள்வோம்.
தொலைக்காட்சி உங்களுக்கு இடது பக்கத்தில்
உள்ளது என வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கு அந்நேரம் இடது பக்கத்தில் சரம்
நடந்தால் முதலில் சொன்ன இந்தியாவுக்கு
வெற்றி எனவும், சரம் வலது பக்கம் நடந்தால்
இரண்டாவதாக சொன்ன ஆஸ்திரேலியாவுக்கு
வெற்றி என பொருள். இதேபோல் உங்கள்
மனைவி உங்களது வலது பக்கத்தில் நின்று
கொண்டு தனக்கு வரவேண்டிய 1000
பணத்தை தன் தோழியிடம் வாங்கி வருகிறேன்
என கூறும்போது உங்களுக்கு வலது பக்கம்
சரம் ஓடினால் கிடைக்கும் என்றும், இடது
பக்கம் ஓடினால் கிடைக்காது என்று பொருள்.
அதுபோல் கூட்டத்தில் இருக்கும் போது
ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்க
நேர்ந்தால் அதிலும் உங்களுக்கு அவர் பக்கம்
மூச்சு ஓடவில்லை என்றால் அவர் பேசுவது
பொய் என பொருள்.
இவ்வாறு வழக்கு, அரசியல் என
அனைத்தையும் நீங்கள் உங்களது மூச்சை
கவனித்து சரியான படி நடந்தும், துஷ்டரை
கண்டால் தூர விலகியும், முடிந்தவரை
நன்னெறி கூறி திருத்தியும், உண்மைக்கு
புறம்பாகவும் சுயநலமாகவும் நடக்காதபடி
நல்வழி செல்லவும் நல்வழி காட்டியாக இந்த
சரசாஸ்திரமே அமையும்.

நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்..

நெற்றிக்கண்ணைத் திறக்கும் ரகசியம்...
------------------------------
----------
சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பது
போல, நாம் ஒவ்வொருவருக்கும் நெற்றிக்கண்
உண்டு. ஆதிகாலத்தில் ஒவ்வொரு
மனிதருக்கும் இருந்ததால் அவரவர் தமது
எதிர்காலத்தை அறிந்தனர். இப்படி அறியும்
அறிவே ஆறாம் அறிவாகும். காலப்போக்கில்
கடவுளின் சாபத்தினால் இந்த
ஆன்மீகச்செல்வத்தை இழந்துவிட்டோம்.
இதில் இந்துக்களாகிய நாம்தான்
முன்னோடிகளாகவும்,முழுமை
பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறோம்.
தற்போது இந்த முறை அரிதானஒன்றாகிவிட்டது.
நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்பது
இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன்
என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை
சோதிப்பதற்காக வந்த சிவன் தனது
நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம்
அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும்,
இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட்
புராணக்கதை என்றும் கூறும் அறிவு
ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம்
நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று
கூறினால் அதற்கும் ஏதாவது வாதம்
வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே
விளங்கிக்கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற
தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை
நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்)
பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி
மிகவும் வெப்பமான காலத்திலும்
கருப்புச்சட்டையை அணிவது எந்த
பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள
விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன்
சிறப்பை மெல்ல மெல்ல இப்போதுதான் சில
மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து
நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக்கொ
ண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள்
ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை
பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட
அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில
கொள்கைகளுக்கும் வழிபாட்டு
முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள்
உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு
குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய்
என்றோ மூட நம்பிக்கை என்றோ
கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக
சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம்
பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும்
கடவுளை அடையும் வழியயும்தான்
கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு
மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி
பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின்
திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது
கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும்
புறக்கண்கள். பார்வையில் படும்
குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு
புகட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக
யாரையாவது பார்த்தால், பழைய
அபிப்பிராயங்கள் உங்களுக்குள்
புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும்
உண்மையை பார்ப்பதில்லை. எனவே
அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண்
திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய
மரபில் அறிதல் என்பது படிப்பால்
பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல. ஆழ்ந்த
புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த
மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை
உணர்கிறீர்கள்.
படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக்
நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த
கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது
பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால்,
செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு
சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது
குறித்து யாரும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம்
மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண்
இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள்
நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது.
இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி.
(Pineal Gland).
பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene
Descartes (René Descartes was a French
philosopher, mathematician and writer who
spent most of his life in the Dutch Republic
(1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை
என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின்
ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்)
தொடர்புடையது.
சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில்
எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி
இதுவும் அமைந்துள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம்
தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின்
எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன
அழுத்தத்தை குறைக்கிறது.
நமது மதம் இந்த சுரப்பியை
தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம்
அடையலாம் என கூறுகிறது. இந்த
மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம்
முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புண
ர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக
கூறப்படுகிறது.
குண்டலினி தியானம் மூலம் இந்த
மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம்
குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ
மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன
பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?
தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும்
இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து
அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும்
பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால்
நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின்
ஊடாக வெளியேற்றி தீயை கூட
வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த
கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல
எண்ணங்களை வளர்க்கலாம்( சிவன் காமனை
எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான்
தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )
திபத் நாட்டில் புருவமத்தியில் சுத்தியாலால்
ஓட்டைபோட்டு மூன்றாம் கண்ணைத்
திறக்கிறார்கள். இது மிகவும் கொடூரமானது.
ஒவ்வொரு மனிதருக்கும் புருவமத்தியில்
நெற்றிப்பகுதியிலிருந்து சில சென்
டிமீட்டர்கள் ஆழத்தில் பட்டாணி சைசுக்கு
ஒரு சுரப்பி இருக்கிறது. இதன் மையத்தில்
தான் நமது மூன்றாவது கண் இருக்கிறது.
பழங்குடிமக்கள்புருவமத்தியில் சூடு
போட்டுக்கொள்கின்றனர். பச்சைக்குத்திக்
கொள்கின்றனர் .வைணவர்கள் கழுமுனை
நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள்
குங்குமம் இட்டுக்கொள்கின்றனர். பெண்கள்
நெற்றிச்சுட்டி இட்டுக்கொள்கின்றனர்.
பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி
உபநயனம் செய்விக்கின்றனர். இஸ்லாமியர்கள்
முட்டி முட்டி தொழுகின்றனர். யோகிகள்
கழுமுனை மந்திரத்தாலும்,
பிராணயாமத்தாலும் நெற்றிக்கண்ணைத்
திறக்கின்றனர்.
ராஜகுருக்கள் வைரக்கற்களால்
நெற்றிக்கண்ணைத் திறக்கின்றனர். ரசவாதிகள்
ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள்
கண்ணுப்புழை என்னும் மூலிகையாலும்,மந
்திரவாதிகள் ருத்திரபஸ்பத்தாலும், சைவ
மடாதிபதிகள் ஒரு முகருத்தராட்சத்தாலும்.
மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக்கல்லாலு
ம்,கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி
ஒளிமூலமும் நெற்றிக்கண்ணைத்
திறக்கிறார்கள். சிலருக்கு விபத்துமூலமாகவு
ம் எதிர்பாராமல் நெற்றிக்கண் திறப்பதுண்டு.
இப்போதும் இந்த மூன்றாவது கண்
ஞானிகள்,ரிஷிகள்,சித்தர்களுக்கு
விதிவிலக்காக இயங்கி வருகிறது. நெற்றிக்கண்
திறப்பு என்பது பருவமடைந்த பெண்கள்
பூப்படைவது போல எல்லா மனிதர்களுக்கும்
ஏற்படும் ஆன்மீகத் திறப்பு(Mystic Maturity)
என எடுத்துக்கொள்ளலாம்.
நாட்டுமருந்துக்கடையில் கருமாக்கல் அல்லது
அஞ்சனக்கல் என கேளுங்கள்.(ஒரு கிராம் ரூ.5/
-இருக்கும்.5 முதல் 10 கிராமுக்குக்
குறையாமல் கேட்டு வாங்குங்கள்.) வாங்கிய
கல்லை உப்புத்தாளில் எமரிப்பேப்பரில்
தேய்த்து எடுக்கவும்.(வாங்கும் கல்
கோணலும் மாணலுமாக இருக்கும்.)
அதிலுள்ள ஒளிக்கற்றைசூட்சுமமாக
வெளிப்படும்.தரையில் விரிப்பு விரித்துத்
தலையணை வைக்காமல்விளக்குகளை
அணைத்து இருளில் படுக்கவும்.
வடக்குத் தவிர இதர திசைகளில் ஏதாவது ஒரு
திசைநோக்கி தலைவைத்து மல்லாந்து
படுக்கவும்.
இரவில் சுமார் 7 மணிக்குப் பால்சாதம் சிறிது
சாப்பிட்டு
10 மணிக்கு மேல் இப்பயிற்சியை
ஆரம்பிக்கலாம். அஞ்சனக்கல்லை கண்களை
மூடியோ மூடாமலோ இரு புருவங்களுக்கு
மத்தியில் வைக்கவும்.
கருமாக்கல்லில் உள்ள
கண்ணுக்குத் தெரியாத தெய்வீகஒளிக்கற்
றைகள் நெற்றிக்கண் ஜவ்வை சிறிதுசிறிதாகக்
கிழிக்கும் .ஒளி சிறிதுசிறிதாக
வெளிவரும்.அதேகல்லை உபயோகித்து
மறுநாளும் பயிற்சி செய்யலாம்.
பயிற்சி ஆரம்பிக்கும் முன் சரியைகிரியையில்
உள்ளவர்கள் தங்களின் குலதெய்வம் அல்லது
இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். மந்திர
யோகம் அல்லது வாசியோகம் பயிற்சி
பெற்றவர்கள் அதனையும் சேர்த்துச்
செய்யலாம். ஒளிநிலை கூடுதலாகி
நெற்றிக்குள்பூரணச்சந்திரன் போல காட்சி
கொடுக்கும். அருள் நிலைபெருகும்.90 நாள்
பயிற்சியில் வெற்றி பெருவீர்கள் என்பது
உறுதி.
பொதுவாக ஏதாவது ஒரு பொருளை படுத்த
நிலையில் நெற்றி நடுவில் வைத்தால் அதில்
ஒரு உறுத்தல் ஏற்படும்.பின் அங்குள்ள இருள்
விலகும்.
சிலருக்கு 90 நாட்களுக்கு மேல் தான் இந்த
அனுபவம் கிடைக்கும்.அது அவரவரின் பிறந்த
ராசி,உடல்தன்மை,மன வலிமை
இவற்றைப்பொறுத்தது.
இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும்
விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம்
திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம்
வாழக்கூடாது என்று நினைக்கும் சிலர்தான்
இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்கள
ோ தெரியவில்லை.
நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும்
வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால்
போலி என்று கேலி செய்து இழந்துவிட்டோம்.
இனியாவது விழிப்போம்.

நினைத்த பணம் வந்து சேர அமானுஷ்ய பரிகாரம்

நினைத்த பணம் வந்து சேர அமானுஷ்ய பரிகாரம்
காலையில் பல் துலக்கியதும் கிழக்கு முகமாக அமர்ந்து சிறிய வெள்ளை தாளில் வெள்ளை  நிற பேனா கொண்டு (மூடி வேறு கலரில் இருக்கலாம்)    ' ஏராளம் எண்ணிக்கை 3300' என 33 முறை மனதினுள் கூறிக்கொண்டே எழுதவும், பின் அதை மடித்து பர்சில் வைத்து கொள்ளவும். பண வரவை திடீர் என ஏற்படுத்தும் அற்புத முறை இது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து பார்த்து 33 முறை கூறி வரலாம் (அதிகபட்சம் 6 முறை). மறு நாள் அந்த தாளை அப்புறப்படுத்தி  விட்டு, வேறு புதிதாக எழுதி கொள்ளவும். தினசரி தேவைகள் உள்ள வரை தொடர்ந்து செய்து வரலாம்-ஒவ்வொரு நாளும் புதிதாக !!

பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா?

பெர்முடா முக்கோணம் சாத்தானின்
கடலா? ரிக்-அதர்வண வேதங்கள்
சொல்லும் உண்மை என்ன?
   அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி
மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை
எவ்வளவு வளர்ச்சி பெற்று
முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில்,
அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும்
வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி
ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும்
அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான்
'பெர்முடா முக்கோணம்' இன்று வரை
திகழ்கிறது.வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில்,
ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த
பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும்
பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான
விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில்
காணாமல் போயிருக்கின்றன.
  அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம
முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை
இறங்கி வரவில்லை.
காணாமல்போன பட்டியலில்
அமெரிக்காவிற்கு சொந்தமான
விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி
நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும்
அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல
மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான்
வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள்
மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள்
இன்னும் தொடரத்தான் செய்கிறது.
இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும்
கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில்
வசிப்பதாக வெகு ஜன மக்கள்
நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த
மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க
முடியவில்லை. மேலும், இப்பகுதியில் மிகப்பெரிய
பிரமிடு மறைந்திருப்பதாகவும் எல்லோரும்
நம்புகிறார்கள். அதனால், இப்பகுதியில் மேலே
பறக்கக்கூடிய எல்லாவற்றையும் கீழே
இழுத்துக்கொள்வதாகவும்
சொல்லப்படுகிறது. கடல் வழியாக உலகை
சுற்றி வலம் வருகையில், பெர்முடா முக்கோணத்தின்
அருகே கடந்துச் செல்லும்போது திசைக் காட்டும்
கருவிகள் தாறுமாறாக சுழன்றதாகவும்,
பயமுறுத்தும் வகையில் விநோதமான
வெளிச்சங்கள் தோன்றியதாகவும் அதனால்,
வேறு வழியாக கப்பலை திரும்பி விட்டதாகவும்
அமெரிக்காவை கண்டுபிடித்த
கொலம்பஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 'நாட்டியமாடும் பயமுறுத்தும்
வெளிச்சங்கள்' உள்ள பகுதி என்றும், 'தீப்பிளம்பு
கொண்ட வானம், பித்துபிடிக்கும்
காம்பஸ்கள்' எனவும் இப்பகுதியை அவர் 1492-ம்
ஆண்டு வர்ணித்துள்ளார்.
  இந்த கடல் பகுதியில் கடந்த 500 வருடங்களாக
ஏராளமான கப்பல் மற்றும் விமானங்கள்
மாயமானாலும், அதற்கு போதுமான
ஆதாரங்கள் இல்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு
வருகிறது, மறுபக்கம் அதற்கான பட்டியல்
வெளியிடப்பட்டும் வருகிறது. 1909-ம் ஆண்டு
சொகுசு படகு மாயமாகி உள்ளது.1945-ம்
ஆண்டு டிசம்பரில் ஃப்ளோரிடாவில் இருந்து கிளம்பிய
அமெரிக்கா விமானம், 120 கி.மீ தூரம் வரை
சென்று, பிறகு மாயமானது. 1948- ம் ஆண்டு
27 பயணிகளுடன் ஒரு கப்பல் மாயமாகி உள்ளது.
1951-ம் ஆண்டு 53 பயணிகளை அழைத்துச் சென்ற
கப்பல் மாயமானது.இப்படி
தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக
மாயமானதால், எல்லோருடைய பாதுகாப்பையும்
கருதி, இப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம்
செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதி
காலம் தொட்டு பாதுகாத்து போற்றப்பட்டு
வந்த இந்து மதங்களின் தர்ம சாஸ்திரமாக
கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான ரிக்
வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய இரண்டு
வேதங்களில் 'பெர்முடா முக்கோணம்' பகுதியில்
நடைபெறும் நிகழ்வை போன்றே, பல அரிய தகவல்கள்
சொல்லப்பட்டுள்ளன. ராமாயணம்: *
'பெர்முடா முக்கோணம்' இடத்தை பற்றிய
செய்திகள் போன்றே, ராமாயணத்திலும்
சொல்லப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து
இலங்கைக்கு செல்லும் கடல் பகுதியில்,
'சிம்ஹிகா' என்ற அசுர பலம்
பொருந்தியவள் கடலில் இருந்ததாகவும்,
அவளின் மேல் பகுதியில் பறக்ககூடிய எந்த
பொருளையும் தன் வசம் ஈர்க்ககூடிய சக்தி
படைத்தவளாகவும் திகழ்ந்ததாக
ராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம்:
* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக
தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற
ஒரு பகுதியைப் பற்றி விரிவாக
சொல்லப்பட்டுள்ளது. * 5 ஆயிரம்
வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்'
இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம்
பெற்றுள்ளன. * பூமியில் இருந்து உருவான
கிரகம்தான் செவ்வாய். அதனால்தான்,
பூமியின் மகன் ( son of bhumi) என்று
சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும்
சொல்லப்படுகிறது. 'கு' என்றால் பூமி,
'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன்
பொருள். இது சமஸ்கிருதத்தில்
சொல்லப்படும் வார்த்தை.* ரிக் வேதத்தில்
இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய என்னும்
சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய்
கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு
தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண
வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது.
காயம்பட்ட பூமியில், தேவர்களின்
மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை
காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி
செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2 டிகிரி
அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது. * பூமி
சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக
இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு
சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம்
ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு
பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில்
நிலவுகிறது. * அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும்
உருவாகி பிரிந்து சென்றுள்ளது.
   அதர்வ ண வேதம்: * அதர்வண வேதத்தில் பல அறிய
கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து
சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக
'தர்பை கல்' என்னும் பகுதி, பெர்முடா
முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே
அமைந்துள்ளன. * 'தர்பை கல்' என்பது, உயர் அடர்த்தி
கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும்.
இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது
ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான
கல்லாகும். * இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த
ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக
பார்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக
அளவில் இருப்பதால், தர்பை கல்லின் மேல் பகுதியில்
செல்லும் எந்த பொருளையும் கீழ் நோக்கி
ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது. * இந்த
'தர்பை கல்'லிருந்து வெளிப்படும் எந்திர காந்த
ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத
கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு
செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு
முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும். * 19-வது
காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில்
என்ன சொல்லப்படுகிறது என்றால், 'ஏ
தர்பை கல்லே! எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து,
எங்களை காப்பாற்றுங்கள்' என கூறப்பட்டுள்ளது.
அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும்
சக்தியானது, புதிதாக உருவாகக்கூடிய அனைத்து
விதமான தீய சக்திகளையும், அடிப்படையிலேயே அழித்து
விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.
   * இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக
ஈர்ப்பு விசை கிடைக்கிறது. * 7-ம் மந்திரத்தில்,
சொல்லப்படுவது என்ன என்றால், தயிர்
எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது,
எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன்
உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல்
உடையதாக சொல்லப்படுகிறது.* நவீன
அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில்
இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு
இணையாக திகழ்வதாகவும் தற்போது
கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீத்தேன்
அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள்
அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும்
விமானத்தை தன் பக்கம்
ஈர்த்துகொள்கிறது.இவை எல்லாம்
அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள
'தர்பை கல்' செயல்பாடுகளாக இருப்பது போலவே,
பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது. நவீன
அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண
வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும்
மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது
கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள்
இருந்து வற்றியதற்கான சுவடுகள்
காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.
தற்போதையை நவீன உலகில், 'பெர்முடா முக்கோணம்'
பற்றிய தகவல்களை நாசா இப்போது
ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும்,
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின்
முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும்
ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண
வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக
தெளிவாக நமது முன்னோர்கள்
சொல்லியிருக்கிறார்கள் என்பது
பிரமிப்பாகதான் இருக்கிறது.மூத்தோர் சொல்
அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல்,
நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும்
உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள்
இந்து மதத்தின் சிறப்புகளை மேலும்
தெளிவுப்படுத்துகிறது

மூல மந்திரம்

நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!