உண்மையிலேயே #சித்தர்கள் சித்தர்கள் #என்கிறார்களே இவர்கள் யார்? ★#இவர்கள்
உண்டென்றால் இவர்களைக் நாம் காண்பது எப்படி? #நமது தமிழில் ஒரு விசேஷம்
என்னவென்றால் அது சொல்லிலேயே பொருளைக் கொண்டிருப்பதுதான். #பாருங்கள்
சித்தர், புத்தர், ஞானி இந்த சொல்லிலேயே அவர்களைப் பற்றிய விபரம் உள்ளது.
#ஆம், சித்தம் தெளிந்தவன் சித்தன். புத்தி தெளிந்தவன் புத்தன். ஞானம்
அறிந்தவன் ஞானி #பாருங்கள் வார்த்தையிலேயே விஷயங்கள் இதுதான் தேன்தமிழின்
அற்புதம். சித்தம் தெளிந்ததனால் அவர்கள் சித்தரானார்கள், நாம் பித்தம்
நிறைந்தனால் பித்தர்கள் ஆனோம். #சித்தம் தெளிந்த அவர்கள் நிலையாமையை
உணர்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு உலகின் இயக்கநிலையின் உண்மை புரிந்தது.
இந்த உலகின் ( பிரபஞ்சத்தின் - பூமியின் ) அருமையான ஆற்றல் என்ன தெரியுமா?
#நீங்கள் ஒன்று தந்தால் அதனை நூறாக திரும்பத்தரும், ஒரு மாங்கொட்டை நட்டால்
எத்தனை மாம்பழங்கள், ஒரு நெல் வைத்தால் எத்தனை நெல்மணிகள்? இந்த மாபெரும்
உண்மையை கண்டறிந்தார்கள் சித்தர்கள்! #இதைப்போலவேதான் புண்ணியங்களும், இதே
நிலைதான் பாபங்களுக்கும். ஒன்று என்பது ஒன்றுடன் நிற்பதில்லை ஒன்று அதன்
தன்மைக்கேற்ப இரண்டாகலாம், நூறாகலாம் ஏன் ஆயிரம் கூட ஆகலாம் என
நன்கறிந்தனர் சித்தர்கள். #ஆகவேதான் அவர்கள் உலக வாழ்வின் அனைத்து
துறைகளுக்கும் தீர்வு தந்தார்கள். ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் மனிதன்
மன மமதை கொண்டவனாக, #தான் தெரியாததையும் தெரிந்தவனாக ஊருக்கு காட்டிக்
கொள்பவனாக, தான் கண்டதை செல்வம் பண்ணும் வழியில் தேர்ந்தவனாக, உண்மையை
மறைத்து தனக்கொரு நீதியும், மற்றவர்களுக்கு ஒரு நீதியுமாக உலாவருபவனாக
#வருவான் என்பதை அறிந்த அந்த சித்புருஷர்கள் தாங்கள் கண்டதையும்,
கொண்டதையும், செய்ததையும், செய்வதையுமே மறைபொருளாக வைத்துள்ளார்கள்.
#மேலும் அவர்களின் பார்வையில் இருந்து எதுமே தப்பாது. ஆயிரக்கணக்கான
சித்புருஷர்கள் வாழ்ந்த, வாழும் உலகில் எங்கும் அவர்கள் நிறைந்துள்ளார்கள்.
#சித்புருஷர்களின் ஒரு விசேஷ அருங்குணம் என்னவென்றால் நாம் அவர்களின்
வழியை பின்பற்றினால் மிக மகிழ்ச்சியுடன் நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும்
அள்ளித்தருவார்கள் பின் தொடர்வார்கள், நம்மை பாதுகாப்பார்கள். #ஆனால் நமது
நிலையின் சிறு மாற்றம் கூட அவர்களை கோபப்பட வைத்துவிடும், ஒரு முறை நம்மீது
கோபம் வந்தால் அதன்பின் என்ன செய்தாலும் அவர்களின் அன்பைப் பெறவே
முடியாது. அதோடு நம் வாழ்வும் அதோகதியாகிவிடும். #காரணம் , அவர்கள்
(சித்தர்கள்) உலகில் விதியின் கைகளில் மாட்டித் தவிக்கும் மனிதர்களை எதன்
மூலமாகவாவது கரைசேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தன்னைக்கரைத்துக்
கொண்டவர்கள். #அதனால்தான் இன்னும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களை நம்பிச் சேர்பவர்களை கரை சேர்க்கிறார்கள். அவர்களையே
ஏமாற்றுபவர்களை (ஏமாற்றுவதாக எண்ணி ஏமாறுபவர்கள்) அவர்கள் அழிக்கிறார்கள்,
ஆமாம் சித்தர்கள் அழிக்கிறார்கள். அழித்திருக்கிறார்கள். #ஆனால் அவர்களை
நம்பினவர்களை எந்த சூழலிலும் கை விடுவதில்லை, கை விட்டதும் இல்லை.
கைவிடப்போவதும் இல்லை. காரணம் அவர்கள் நமக்காக தன்னைக்
கரைத்துக்கொண்டவர்கள். மருத்துவம், மாந்தரீகம், ஜோதிஷம், வாழ்வியல்
அத்தனையிலும் அவர்களின் பங்கு மகத்தானது. #அவர்களைக் காணவும், அவர்களுடன்
சேரவும், அவர்களின் அன்பில் திளைக்கவும், அதியற்புதமான நிலைகளை அடையவும்
மிக எளிமையான அவர்களின் மூல மந்த்ரம் ஒன்று உண்டு. #இதனை நல்ல தூய்மையான
உள்ளத்துடன், மற்றவர்களுக்கு (எந்தவிதமான பலனும் எதிர்பாராமல்) #உதவும்
மனதுடன் இரவில் அவர்களை நினைத்து நூற்றிஎட்டு முறை மனமுருக தினசரி
சொல்லுங்கள் அவர்களின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும், #ஆனால் உங்களுடைய
இந்த சாதனை முழுக்க முழுக்க பிறர் நன்மைக்காக மட்டுமே தான் பயன்படவேண்டும்.
( அதாவது அவர்கள் உங்கள் மூலமாக உலகமக்களுக்கு நன்மைகள் செய்ய
முயல்வார்கள்) சித்புருஷர்கள் நமது உள் மனம் புரிந்தவர்கள், #நிஜத்தில்
ஒன்றும், செயலில் ஒன்றுமாக இறங்கி விடவேண்டாம். உன்மத்த நிலைக்கு
(பைத்தியநிலை) ஆளாக்கி விடுவார்கள். #மேலும் பரிசோதிக்க எண்ணி
இறங்கவேண்டாம். (சித்தர்களோடும் சித்தமார்க்கத்தோடும் விளையாட்டு பேச்சு
வேண்டாம்) #உண்மையில் உலக நன்மைக்காக செயல்பட நினைப்பவர்கள் செய்யலாம்.
சாதிக்கலாம், பெரும் புகழ் பெறலாம், உங்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது.
சித்புருஷர்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியும். அந்த மகா
மந்த்ரம் "ஓம் சிங் ரங் அங் சிங்" #இந்த மந்த்ரத்தை ஒரு சிறு இடைவெளி கூட
இல்லாமல் சொல்லி வந்தால் அந்த மகாசித்புருஷர்களை நீங்களும் சந்திப்பீர்கள்
No comments:
Post a Comment