Tuesday, January 3, 2017

சித்தர்கள் #என்கிறார்களே இவர்கள் யார்?

உண்மையிலேயே #சித்தர்கள் சித்தர்கள் #என்கிறார்களே இவர்கள் யார்? ★#இவர்கள் உண்டென்றால் இவர்களைக் நாம் காண்பது எப்படி? #நமது தமிழில் ஒரு விசேஷம் என்னவென்றால் அது சொல்லிலேயே பொருளைக் கொண்டிருப்பதுதான். #பாருங்கள் சித்தர், புத்தர், ஞானி இந்த சொல்லிலேயே அவர்களைப் பற்றிய விபரம் உள்ளது. #ஆம், சித்தம் தெளிந்தவன் சித்தன். புத்தி தெளிந்தவன் புத்தன். ஞானம் அறிந்தவன் ஞானி #பாருங்கள் வார்த்தையிலேயே விஷயங்கள் இதுதான் தேன்தமிழின் அற்புதம். சித்தம் தெளிந்ததனால் அவர்கள் சித்தரானார்கள், நாம் பித்தம் நிறைந்தனால் பித்தர்கள் ஆனோம். #சித்தம் தெளிந்த அவர்கள் நிலையாமையை உணர்ந்தார்கள். அதனால் அவர்களுக்கு உலகின் இயக்கநிலையின் உண்மை புரிந்தது. இந்த உலகின் ( பிரபஞ்சத்தின் - பூமியின் ) அருமையான ஆற்றல் என்ன தெரியுமா? #நீங்கள் ஒன்று தந்தால் அதனை நூறாக திரும்பத்தரும், ஒரு மாங்கொட்டை நட்டால் எத்தனை மாம்பழங்கள், ஒரு நெல் வைத்தால் எத்தனை நெல்மணிகள்? இந்த மாபெரும் உண்மையை கண்டறிந்தார்கள் சித்தர்கள்! #இதைப்போலவேதான் புண்ணியங்களும், இதே நிலைதான் பாபங்களுக்கும். ஒன்று என்பது ஒன்றுடன் நிற்பதில்லை ஒன்று அதன் தன்மைக்கேற்ப இரண்டாகலாம், நூறாகலாம் ஏன் ஆயிரம் கூட ஆகலாம் என நன்கறிந்தனர் சித்தர்கள். #ஆகவேதான் அவர்கள் உலக வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் தீர்வு தந்தார்கள். ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் மனிதன் மன மமதை கொண்டவனாக, #தான் தெரியாததையும் தெரிந்தவனாக ஊருக்கு காட்டிக் கொள்பவனாக, தான் கண்டதை செல்வம் பண்ணும் வழியில் தேர்ந்தவனாக, உண்மையை மறைத்து தனக்கொரு நீதியும், மற்றவர்களுக்கு ஒரு நீதியுமாக உலாவருபவனாக #வருவான் என்பதை அறிந்த அந்த சித்புருஷர்கள் தாங்கள் கண்டதையும், கொண்டதையும், செய்ததையும், செய்வதையுமே மறைபொருளாக வைத்துள்ளார்கள். #மேலும் அவர்களின் பார்வையில் இருந்து எதுமே தப்பாது. ஆயிரக்கணக்கான சித்புருஷர்கள் வாழ்ந்த, வாழும் உலகில் எங்கும் அவர்கள் நிறைந்துள்ளார்கள். #சித்புருஷர்களின் ஒரு விசேஷ அருங்குணம் என்னவென்றால் நாம் அவர்களின் வழியை பின்பற்றினால் மிக மகிழ்ச்சியுடன் நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அள்ளித்தருவார்கள் பின் தொடர்வார்கள், நம்மை பாதுகாப்பார்கள். #ஆனால் நமது நிலையின் சிறு மாற்றம் கூட அவர்களை கோபப்பட வைத்துவிடும், ஒரு முறை நம்மீது கோபம் வந்தால் அதன்பின் என்ன செய்தாலும் அவர்களின் அன்பைப் பெறவே முடியாது. அதோடு நம் வாழ்வும் அதோகதியாகிவிடும். #காரணம் , அவர்கள் (சித்தர்கள்) உலகில் விதியின் கைகளில் மாட்டித் தவிக்கும் மனிதர்களை எதன் மூலமாகவாவது கரைசேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தன்னைக்கரைத்துக் கொண்டவர்கள். #அதனால்தான் இன்னும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நம்பிச் சேர்பவர்களை கரை சேர்க்கிறார்கள். அவர்களையே ஏமாற்றுபவர்களை (ஏமாற்றுவதாக எண்ணி ஏமாறுபவர்கள்) அவர்கள் அழிக்கிறார்கள், ஆமாம் சித்தர்கள் அழிக்கிறார்கள். அழித்திருக்கிறார்கள். #ஆனால் அவர்களை நம்பினவர்களை எந்த சூழலிலும் கை விடுவதில்லை, கை விட்டதும் இல்லை. கைவிடப்போவதும் இல்லை. காரணம் அவர்கள் நமக்காக தன்னைக் கரைத்துக்கொண்டவர்கள். மருத்துவம், மாந்தரீகம், ஜோதிஷம், வாழ்வியல் அத்தனையிலும் அவர்களின் பங்கு மகத்தானது. #அவர்களைக் காணவும், அவர்களுடன் சேரவும், அவர்களின் அன்பில் திளைக்கவும், அதியற்புதமான நிலைகளை அடையவும் மிக எளிமையான அவர்களின் மூல மந்த்ரம் ஒன்று உண்டு. #இதனை நல்ல தூய்மையான உள்ளத்துடன், மற்றவர்களுக்கு (எந்தவிதமான பலனும் எதிர்பாராமல்) #உதவும் மனதுடன் இரவில் அவர்களை நினைத்து நூற்றிஎட்டு முறை மனமுருக தினசரி சொல்லுங்கள் அவர்களின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும், #ஆனால் உங்களுடைய இந்த சாதனை முழுக்க முழுக்க பிறர் நன்மைக்காக மட்டுமே தான் பயன்படவேண்டும். ( அதாவது அவர்கள் உங்கள் மூலமாக உலகமக்களுக்கு நன்மைகள் செய்ய முயல்வார்கள்) சித்புருஷர்கள் நமது உள் மனம் புரிந்தவர்கள், #நிஜத்தில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக இறங்கி விடவேண்டாம். உன்மத்த நிலைக்கு (பைத்தியநிலை) ஆளாக்கி விடுவார்கள். #மேலும் பரிசோதிக்க எண்ணி இறங்கவேண்டாம். (சித்தர்களோடும் சித்தமார்க்கத்தோடும் விளையாட்டு பேச்சு வேண்டாம்) #உண்மையில் உலக நன்மைக்காக செயல்பட நினைப்பவர்கள் செய்யலாம். சாதிக்கலாம், பெரும் புகழ் பெறலாம், உங்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது. சித்புருஷர்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியும். அந்த மகா மந்த்ரம் "ஓம் சிங் ரங் அங் சிங்" #இந்த மந்த்ரத்தை ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் சொல்லி வந்தால் அந்த மகாசித்புருஷர்களை நீங்களும் சந்திப்பீர்கள்

எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் !
காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை,
காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

Sunday, January 1, 2017

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
படிப்பில் வல்லவனாக.
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:
வயிற்று வலி நீங்க:-
============
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
உற்சாகம் ஏற்பட:-
=============
⚘அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹஹாத்யுதி:
ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
=============
⚘மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:⚘
கண்பார்வை தெளிவுபெற :-
===============
⚘ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்⚘
பெருமதிப்பு ஏற்பட :-
===============
⚘ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர:⚘
எண்ணிய காரியம் நிறைவேற :-
================
⚘ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன:⚘
கல்யாணம் நடக்க :-
===============
⚘காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு
உயர்ந்த பதவி ஏற்பட :-
==============
⚘வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:⚘
மரண பயம் நீங்க :-
===============
⚘வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:⚘
அழியாச் செல்வம் ஏற்பட :-
==============
⚘அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ மஹாதந:⚘
நல்ல புத்தி ஏற்பட :-
⚘ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்⚘
சுகம் உண்டாக :-
==============
⚘ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம:⚘
க்ஷேமம் உண்டாக :-
==============
⚘அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:⚘
துன்பங்கள் தொலைய :-
===============
⚘பூசயோ பூஷணோ பூதிர்
விசோக: சோகநாசன:
வியாதிகள் நீங்க :-
==============
⚘பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய:⚘
மோக்ஷமடைய :-
===============
⚘சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:⚘
சத்ருவை ஜெயிக்க :-
==============
⚘ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன:⚘
ஆபத்து விலக :-
==============
⚘அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந:⚘
மங்களம் பெருக :-
===============
⚘ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:⚘
துர்சொப்பனம் நீங்க :-
===============
⚘உத்தாரணோ துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:⚘
பாபங்கள் நீங்க :-
==============
⚘தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா
க்ஷிதீச: பாபநாசந:⚘

ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்_

ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்_* 🌹
_( *தமிழ்மொழி ஒரு தந்திரமொழி* தொடர் பதிவுகளை அடியேன் இன்னும் எழுதிகொண்டு உள்ளதால் அதை முடித்தவுடன் அல்லது கூடிய விரைவில் நிச்சயம் பதிவு செய்யபடும். *தங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பர்களே*)_
🍁 _தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே *ஐம்பொன் அல்லது பஞ்சலோகம்* என்றழைக்கிறோம்._
🍁 _பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்_.
🔥 *_ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்_*
🍁 _இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் *வியாழ* கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், *சனிகிரகத்தின்* ஆற்றலை பெற இரும்பையும், *சுக்கிர(வெள்ளி)கிரகத்தின்* ஆற்றலை பெற வெள்ளியையும், *சூரிய கிரகத்தின்* ஆற்றலை பெற செம்பையும், *கேது கிரக்கத்தின்* ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்._
🍁 _நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் *ஜோதிடம்* என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்_
🍁 _இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்._
🔥 _*ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்*_🔥
இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் _சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்_
♦ *_தங்கம்_*
🍁 _தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும்._
🍁 _அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்_.
🍁 _கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை._
🍁 _இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்._
♦ *_வெள்ளி_*
🍁 _வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் *அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது.* இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை  கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது *சூட்சமம்*_.
♦ *_செம்பு_*
🍁 _செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை *விழிப்புடன்* வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது._
🍁 _இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,மூளையின் செயல் திறன் அதிகமாகும்._
♦ *_இரும்பு_*
🍁 _இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்._
🌻 *_இதன் சூட்சம ரகசியம்_*
🍁 _“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் *இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும்*._
🍁 _குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்_
♦ *_ஈயம்_*

🍁 _இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது._
🍁 _இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்._
🍁 _இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும்._
_*இதன் விலையும் மலிவாக தான் உள்ளது*._
🍁 _இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அதில் விசயம் இல்லாமல் இல்லை அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாககிடைக்கவில்லை._
எப்படி இருப்பினும் இந்த பஞ்சலோகத்தால் நன்மை அதிகம் என்பது திண்ணம்
*_வாழ்க தமிழர்கள் விஞ்ஞான முறையும், சித்தர்களின் ரசாயனவியலும்_*

இராகு கால பூசைகள் ஏன்?

இராகு கால பூசைகள் ஏன்?
செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?
நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும். ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.
அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1.30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.
ராகு கிரகத்துக்கு அதிதேவதையாக துர்கை கூறப்பட்டுள்ளாள். மேலும் குஜவத் ராகு: சனிவத் கேது: (இதை மாற்றிச் சொல்வோரும் உண்டு) என்னும் வசனப்படி, செவ்வாயைப் போலவே ராகுவுக்கு பலனைச் சொல்ல வேண்டும் என்றும், சனியைப் போலவே கேதுவின் பலன் அமையும் என்றும் கூறுகிறது ஜோதிஷம். இதை கவனிக்கும்போது செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர்மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள். தனது நண்பரான - குருவான - சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.
----௦---------------------------௦--------------------------------------௦----------------------------------------------
ராகு பகவான் - கருமையானவர்; தென்மேற்கு திசைக்கு அதிபதி; கிரகங்களில் பெண் கிரகம்; இனத்தில் சங்கிரமன்; வடிவில் உயரம்; தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர். பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்). இவரின் அதிதேவதைகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகருமாரி! இவரது நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம். இவரது திசை, 18 வருடங்கள்.
'ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை' என்பர். சாயாகிரகமான ராகு லக்னத்தில் இருக்க... அந்த ஜாதகர் பலவானாகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பார். மர்மமான மனதுக்குச் சொந்தக்காரராக விளங்குவர். ராகு பகவான் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஜாதகர்கள், முன்கோபியாக, செலவாளிகளாக, மனம் போல் வாழ்பவராக இருப்பர். ராகு 3-ல் இருந்தால், அடிக்கடி பயணம் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. 4-ல் இருந்தால் வேளை தவறிய உணவு, தாயாருக்கு உடல் நலக்குறைபாடு ஆகிய பலன்கள் கிடைக்கும். 5-ல் ராகு இருந்தால் திருமணம் மற்றும் புத்திரத் தடைகள் உண்டாகும். பூர்வ ஜன்ம புண்ணியம் பாதிக்கும்; கடும் நாக தோஷம் விளையும்!
6-ல் இருந்தால் திருமண பாக்கியம், நீண்ட ஆயுள், திடீர் பணவரவு மற்றும் சொத்து சேர்க்கை உண்டு. ஸ்ரீஅஷ்டலட்சுமியின் அருள் கிட்டும். 7-ல் இருக்க திருமணம் தடைபடும். அல்லது கலப்பு மணம் புரிவர். 8-ல் இருந்தால் இரக்கம் அற்றவராகவும், பாலாரிஷ்ட தோஷம் உள்ளவராகவும் திகழ்வர். 9-ஆம் இடத்தில் ராகு இருந்தால் தந்தைக்கு நஷ்டம்; மூதாதையரது சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும். பூமியும் பொருளும் சேரும்.
10-ஆம் இடத்தில் இருந்தால், விதவையால் ஆதாயம் கிடைக்கும்; நவரத்தினங்கள் சேரும்; யோக வாழ்வு வாழ்வர். ராகு 12- இல் இருந்தால் பிதுர் அரிஷ்டமும் திடீர் யோகமும் உண்டு. 12-ல் இருந்தால், சிந்தனாவாதி; சயன சுகமற்றவர்; சர்ப்ப தோஷம் இருக்கும். கன்னியில் ஆட்சியும் விருச்சிகத்தில் உச்சமும் பெறும் ராகு பகவான் எப்போதுமே சந்தோஷங்களைத் தருவார்!
zczczczzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzczczczczczczczczcz
ஞானயோகம் தரும் கேது!
கேது பகவான்- செந்நிறம் கொண்டவர். வடமேற்கு திசைக்கு அதிபதி; அலி கிரகம்; இனத்தில் சங்கிரமன்; மர்ம உறுப்புக்கு அதிபதி. பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்; நாடியில் பித்தநாடி. ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். வேத- வேதாந்த அறிவு; மோட்சம், விஞ்ஞான- மெய் ஞானத் தேடல் ஆகியவற்றின் காரகனும் இவர்தான்! சிவப் பிரியரான இவர், தவம் செய்யும் வலிமையையும் தருவார். எளிமைக்கும் கடுமைக்கும் நடுவே இருக்கும் கேது, சகல சௌபாக்கியங்களை அருள்வதுடன், வியாதிகளில் இருந்து நிவாரணமும் தர வல்லவர். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியான கேதுவின் திசை- 7 வருடங்கள்!
சாயா கிரகமான கேது, அவரவர் லக்னப்படி... சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் சாதாரணமா கவும் பலன் தருவார். ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருந்தால், குணவானாகவும் பலசாலியாகவும் திகழலாம். 2-ல் இருந்தால் வாக்கு, ஸித்தி, யோகம், சத்ரு ஜெயம், தான-தர்மம், சாஸ்திர ஞானம் மற்றும் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 3-ல் இருந்தால் சத்ருக்கள் அழிவர்.
4-ல் இருந்தால் கலைஞானம் தருவார். 5-ல் இருந்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 6-ல் இருந்தால் யோகம் கிடைக்கும்; பகை ஒழியும். 7-ல் இருந்தால் களத்திர அரிஷ்டம்; பெண்பித்தராக இருப்பர். 8-ல் இருந்தால் மனைவிக்கு தோஷம். 9-ல் இருந்தால், தந்தை பாக்கியக் குறைவு; தரித்திரம், புண்ணியத்தில் தடை உண்டு. 10-ல் இருந்தால் விவேகி; ராஜாங்க சேவை; தான-தர்மத்தில் ஈடுபாடு உண்டாகும். 11-ல் இருந்தால் புண்ணியவானாக திகழலாம். 12-ல் இருந்தால் செல்வ போகமும் மோட்சமும் கிடைக்கும். அந்தஸ்து- அதிகாரத்துடன் வாழ்வர்!
ராகு-கேதுவின் அருள் பெற விரும்புவோர், திருநாகேஸ் வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று முறையே ராகு- கேதுவை வழிபட்டு வரலாம்.
இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில்- ராகு காலத்தில், துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று மனமுருகி அம்பாளை வழிபடுவதால் ராகுவின் அனுக்கிரகத்தைப் பெறலாம். கேதுவின் அருள்பெற வேண்டுமெனில், எமகண்ட வேளையில் சித்ரகுப்தரை தியானிப்பது நல்லது. தவிர, அருகில் இருக்கும் ஆலயங்களில் அருளும் நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட்டும் பலன் பெறலாம்.

குபேர முத்திரை

வாழ்க்கையில் நினைத்த
காரியங்களில் வெற்றி
பெற குபேர முத்திரை!!!
குபேர முத்திரை
வாழ்க்கையில் நினைத்த
காரியங்களில் வெற்றி
பெற
பெரு விரல் நுனியுடன்
சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை
இணைப்பதே குபேர முத்திரை ஆகும்.
அதிகமாய் அழுத்தம்
தராது.விரல்களை சற்று தளர்வாக
பிடித்தல் வேண்டும்.பத்து முதல்
பதினைந்து நிமிடங்கள் வரை இந்த
முத்திரையை செய்யலாம்.
இந்த முத்திரையானது நெருப்பு,
காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச
பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த
காரியத்தை சித்தியாக்கும்
சக்தியாக மாற்றமடையும். இதன்
மூலம் வாழ்வு வளமாகும்
என்பதால் இதனை குபேர முத்திரை
என்று அழைக்கிறார்.
அனைத்து செல்வங்களுக்கும்
அதிபதியாகக் கருதபடுபவர்
குபேரன். குபேர முத்திரையை
செய்வதன் மூலம் விரும்பிய
வளங்களைப் பெறலாம்.
எனவேதான் இந்த முத்திரையை குபேர
முத்திரை என்று அழைக்கிறார்கள்.
செய்முறை:
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும்
ஒன்றாகத் தொடும்படி
இணையுங்கள். பிற இரண்டு
விரல்களும் மடித்து உள்ளங்கையைத்
தொட்டுக்
கொண்டிருக்க
வேண்டும்.இரண்டு கைகளிலும் ஒரே
நேரத்தில் செய்யவும்.இந்த
முத்திரையைச் செய்யும்முன்
நீங்கள் எதைபெற விரும்புகிறீர்க
ளோ அதைக் குறித்து தீவிரமாக
மனதில் சிந்தனை
செய்யுங்கள்.சில
நிமிடங்களுக்குப் பின் இந்த
முத்திரையைச் செய்தபடியே அந்தச்
சிந்தனையைத் பத்மாசனம் அல்லது
சுகாசனத்தில் செய்வது மிகச்
சிறந்த பலங்களைத் தரும்.
முடியாதவர்கள் ஒரு
நாற்காலியில் அமர்ந்தபடியே கூட
இந்த முத்திரையை
செய்யலாம்.அமரும் முறையை
விட இந்த முத்திரையைப்
பொறுத்தவரை நாம்
விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு
முகமான தீவிரமான சிந்தனையே
மிக முக்கியமாகும்.
எவ்வளவு நேரம்?
*குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் என
ஒரு நாளில் மூன்று முதல் நான்கு
தடவைகள் வரை செய்யலாம்.
*ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 45
நிமிடங்கள் வரை
செய்யலாம்,அதற்கு மேல்
வேண்டாம்.
*ஆல்பா மைண்ட் கண்ட்ரோல்
முறையில் சிறு சிறு விஷயங்களை அடைய
(உதாரணமாக ஒரு துணி
வாங்கச் செல்கையில்
விரும்பிய நிறத்தில் துணி அமைய,
டிரெயின் டிக்கெட் ரிசர்வ்
செய்யச் செல்லும் போது
டிக்கெட் கிடைக்க என சிறு சிறு
அன்றாடத் தேவைகளுக்கும்)இந்த
முத்திரையைப் பயன் படுத்தலாம்
இவற்றுக்காச் குபேர முத்திரையை ஒரு
சில நிமிடங்கள் செய்தாலே
போதுமானது.
எப்படி வேலை செய்கிறது?
பெருவிரல், சுட்டு விரல்,
நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும்
இணைக்கும் போது கீழ்காணும்
நிகழ்வுகள் நடை பெறுகிறது.
*நெறுப்பு, காற்று, ஆகாயம்
ஆகிய மூன்று பஞ்சபூதங்கள்
தூண்டப்படுகின்றன.
*மனிபூரகச் சக்கரம், அனாஹதம்,
விஷுதி, ஆகிய சக்கரங்கள்
தூண்டப்படுகிண்றன.
*செவ்வாய்,குரு(வியாழன்),
சனி, ஆகிய கிரகங்களின் சக்திகள்
அதிக அளவில் உடலினுள்
கிரகிக்கப்படுகின்றன.
*இந்த மூன்று விரல்களோடு இணைக்கப்
பட்டுள்ள சக்தி ஓட்டப் பாதைகள்
தூன்டப்படுகின்றன.
இத்தனையும் நிகழும் போது, நமது
ஆழ்மனம்(Sub consious mind)
விழித்தெழுகிறது. நாம் எதை
வேண்டுமென தீவிரமாகச்
சிந்திக்கிறோமோ அந்த எண்ணம் நம்
ஆழ் மனதில் ஆழமாகப் பதிகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய
தொழிலைத் துவங்கும் போது
இந்தத் தொழில்
வெற்றி பெற வேண்டும்
என்று ஒரு முகமாக தீவிரமாகச்
சிந்தித்தபடி குபேர முத்திரையைச்
செய்யும்போது அந்தச் சிந்தனை
உங்கள் ஆழ்மனதில்
பதிந்துவிடுகிறது.
ஆழ்மனதில் ஒரு சிந்தனையை விதைத்து
விட்டால் அதைச்
செயலாக்கும் வழிமுறைகளை
உங்களது உள்ளுணர்வு
உங்களுக்குக் காட்டிக்
கொண்டேயிருக்கும்.நாம்
உறங்கும் போதும் கூட ஆழ்மனது
உறங்குவதுயில்லை.அதில்
விதைக்கப்பட்ட சிந்தனையைச்
செயலாக்குவது எப்படி என
திட்டங்களைத் தீட்டிக்
கொண்டேயிருக்கும்.
ஹிப்னாடிசம்,மெஸ்மரிசம்,
போன்ற கலைகளும் இதையே
செய்கின்றன, நமது புற மனதை
(Consious Mind) ஹிப்னாடிசம்
மூலம் தூங்க வைத்து ஆழ்மனதில்
எண்ணங்களை விதைப்பதே
ஹிப்னாடிசத்தின் அடிப்படை.
குபேர முத்திரையில் எந்தவிதமான
மந்திரமும் கிடையாது. நமது
எண்ணங்களை ,விருப்பங்களை நமது
ஆழ்மனதில் பதிய வைக்கும் ஒரு
தந்திர வழியே (Tantra)இந்தக் குபேர
முத்திரை!
பலன்கள்.
*நினைத்த காரியங்களில்
வெற்றி பெறலாம்.
*வாழ்க்கையை வளமாக்கிக்
கொள்ளலாம்

Wednesday, December 14, 2016

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்

எல்லா காரியங்களும் தடை பட்டுக் கொண்டே இருக்கின்றதா? அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!!!
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:
நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். “பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே!